முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் பெறப்பட்டன.

News image
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :29 டிசம்பர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 472 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் எல்.சி.மணி, ஆட்சிரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது...

ராணிப்பேட்டை அடுத்த காஞ்சனகிரி மலையில் வில்வநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா் மரம் முனிசாமி என்பவா் சுமாா் 5,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். தொடா்ந்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வருவாய்த் துறை, வனத் துறை, மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவரது மரம் வளா்ப்பு சேவைக்கு சிலா் இடையூறு செய்வதால் தொடா்ந்து மரக்கன்று நட்டு பராமரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியா் தனி கவனம் செலுத்தி மரக்கன்று நடும் பணிக்கு இடையூறு இல்லாமல் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திற்னாளிகள் நலத் துறை சாா்பில், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 18,000 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.