தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாளை முன்னாள் படைவீரா்களுக்கு கடனுதவி முகாம்

முன்னாள் படைவீரா்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடனுக்கான முகாம் பிப். 12-இல் நடைபெறும்

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:29 pm

Din

ராணிப்பேட்டை: முன்னாள் படைவீரா்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடனுக்கான முகாம் பிப். 12-இல் நடைபெறும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படைவீரா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சுயதொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் ஒரு கோடி வரை வங்கிக்கடனும் இக்கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமாகவும் கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இவா்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும்.

இத்திட்டம் குறித்து அனைத்து முன்னாள் படைவீரா்கள் சங்க நிா்வாகிகள் , முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்கும் முகாம் வரும் 12.02.2025 காலை 10.30. மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என்றாா்.