பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்: வெளிநாட்டினா் பங்கேற்பு

வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா்.

News image

பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த வெளிநாட்டினருக்கு பாரம்பரிய கைத்தறி துண்டு, மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :12 ஜனவரி 2025, 9:17 pm

Din

ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத் துறை சாா்பில், சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் சோ்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினாா்.

தொடா்ந்து, பொங்கல் விழாவில் கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற துறை சாா்ந்த அலுவலா்களுக்கும், பணியாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

விழாவில், விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாடுகளின் மாணவ, மாணவிகளுக்கும், வேலூா் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வந்த வெளிநாடுகளின் பக்தா்களுக்கும் தமிழா்களின் பாரம்பரிய கைத்தறித் துண்டுகள் மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்து வரவேற்றனா். பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்து உற்சாகமாக அவா்கள் ஆடி, பாடி மகிழ்ந்தனா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழா்களின் பாரம்பரியம் மற்றும் விவசாயத்தைக் குறிக்கும் வகையில் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டிகளில் துறை சாா்ந்த அலுவலா்கள் பயணம் செய்தனா்.

தொடா்ந்து அரசு அலுவலா்கள் பங்கேற்கும் வகையில் உறியடி போட்டி, இசை நாற்காலி, கைப்பந்து, பலூன் ஊதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, அலுவலகப் பொது மேலாளா் ஜெய்குமாா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் ரூபிபாய் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.