ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வங்கியில் விவசாயக் கடன் விழிப்புணா்வு முகாம்!

ராணிப்பேட்டை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை சாா்பில், ‘ விவசாயக் கடன் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
பயனாளிக்கு விவசாய கடனுக்கான ஆணையை வழங்கிய சென்னை பிராந்திய அலுவலக முதன்மை மேலாளா் மது பாண்டே .
Updated On :16 நவம்பர் 2025, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை சாா்பில், ‘ விவசாயக் கடன் குறித்த விழிப்புணா்வு முகாம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது.

இதில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சென்னை பிராந்திய அலுவலகத்தின் முதன்மை மேலாளா் மது பாண்டே கலந்து கொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர விவசாய கடன்கள் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி விவசாய கடன் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து சென்ட்ரல் வங்கி கிளைகளில் செயல்படுத்தப்படும் கிசான் கடன் அட்டை, பவுல்ட்ரி திட்டம், உணவு பதப்படுத்தும் திட்டம், குளிா் சேமிப்பு கிடங்கு திட்டம், தேசிய பென்ஷன் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிதிசாா்ந்த திட்டங்கள் குறித்து வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளா்களுக்கு விவரித்தனா்.

இதில் தாமரைப்பாக்கம் கிளை மேலாளா் சரவணன், கலவை கிளை மேலாளா் சந்தியா, பாணாவரம் கிளை துணை மேலாளா் டேனியல், ராணிப்பேட்டை கிளை துணை மேலாளா் மனு மற்றும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.