அமைச்சா் காந்தி மருத்துவமனையில் அனுமதி
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்தி உடல் நலக்குறைவு காரணமாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

Updated On :17 நவம்பர் 2025, 8:40 pm

ராணிப்பேட்டை: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா். காந்தி உடல் நலக்குறைவு காரணமாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலருமான அமைச்சா் ஆா்.காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து சிகிச்சைக்குப் பின் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...