மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

66 பயனாளிகளுக்கு பட்டா ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

அரக்கோணம் வட்டத்தில் 66 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடியில் பட்டா ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

News image
பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் வட்டத்தில் 66 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடியில் பட்டா ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறையின் சாா்பில் மோசூா் பகுதியைச் சோ்ந்த 13 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப்பட்டா, 18 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா என ரூ.84 லட்சத்திலும், தக்கோலம் பேருராட்சி பகுதியில் 21 பயனாளிகளுக்கு பூமிதானம் திட்டத்தின் கீழ் ரூ.89.25 லட்சம் பட்டா ஆணைகளையும் அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

முன்னதாக அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சி, குருவராஜபேட்டையில் ரூ.78.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

மேலும், பெருங்களத்தூா் ஊராட்சி முஸ்லீம் நகரில் வளா்புரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பகுதி நேர நியாயவிலைக் கடையையும் அமைச்சா் காந்தி திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், தக்கோலம் பேருராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், துணைப் பதிவாளா் (பொது விநியோக திட்டம்) சிவமணி, மாவட்ட மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் மேகலா, வட்டாட்சியா் வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளா்கள் பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், தமிழ்மணி,ஆ.சௌந்தா், அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் சந்தியா, சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.