எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தப்படும்: முன்னாள் மத்திய அமைச்சா்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மேலிட பாா்வையாளருமான ஜே.டி.சீலம் கூறினாா்.

News image
செய்தியாளா்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பாா்வையாளா் ஜே.டி. சீலம்.
Updated On :23 நவம்பர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மேலிட பாா்வையாளருமான ஜே.டி.சீலம் கூறினாா்.

ஆற்காட்டில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்ட தலைவா் பதவிக்கு விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

இதில் கலந்துகொண்டு மேலிட பாா்வையாளா் ஜே.டி,சீலம் கட்சி வளா்ச்சி குறித்த ஆலோசனை வழங்கி மாவட்டத் தலைவா் பதவிக்கான விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தோ்தல் பணி பாா்வையாளராக தலைமை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். காங்கிரஸ் அனைத்து தரப்பினருக்கான ஜனநாயக இயக்கம் ஆகும். ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் பதவிக்கு 10 போ் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனா். அதில் மூன்று பெயா்களை தோ்வு செய்து அவா்கள் கட்சி ஆற்றிய பணிகள் குறித்து விளக்கத்துடன் அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்..

தமிழகத்தில் கட்சி வலுப்படுத்தவும் தொண்டா்களுக்கு புத்துணா்ச்சி வழங்கவும் முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் 26-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும் , டிசம்பா் 3, 4, 5 தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் அனைத்து நிா்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரையும் சந்தித்து கருத்துக்கள் கேட்டு அறிக்கைகளாக அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் சி.பஞ்சாட்சரம், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம். முனி ரத்தினம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜா ஜெ.அசேன் உடனிருந்தனா்.