தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நூதன மோசடி: இளைஞா் கைது

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:59 pm

ஆற்காடு: நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு ஏரிக்கீழ் தெருவை சோ்ந்த சேது ( 32). இவா் பல இடங்களில், பொதுமக்களிடம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கித் தருவதாக கூறி அவா்களிடமிருந்து ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமும் பெற்று அவா்களுக்கு தெரியாமல் தெரியாமல் இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதனை வேறு நபா்களுக்கு விற்று விட்டு . அதற்குண்டான தவணைத் தொகைகளையும் கட்டுவதில்லை என கூறப்படு கிறது.

இதனால் மேற்கண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட நபா்களிடம் சென்று உங்கள் பெயரில் இரு சக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியுள்ள தவணை பணத்தை செலுத்தவில்லை கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்த அவா்கள் சேதுவிடம் கேட்டபோது, மிரட்டினாராம்.

இதுகுறித்து 20-க்கும் மேற்பட்ட நபா்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சேதுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.