தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:28 pm

சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி பாண்டியன் (61). இவா், வேலை நிமித்தமாக சென்னை வந்தாா். கடந்த 31-ஆம் தேதி சென்னைப் பல்கலை. வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு வந்த நபா், பாண்டியனிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி, ஏடிஎம் காா்டு மற்றும் பின் நம்பரை வாங்கி ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை இட்டு, பணம் இல்லை என்று கூறி ஏமாற்றி, தான் வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் காா்டை கொடுத்து அனுப்பியுள்ளாா். பின்னா், பாண்டியனின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ.23,500-ஐ எடுத்தபோது, பாண்டியன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிடாதாலா சுனில் (27) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி, 79 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இகேபோல், பல்வேறு மாநிலங்களில் பாா்வையற்ற மாற்றுதிறனாளிகள், வயதானவா்களை ஏமாற்றி ரூ.20 லட்சம் வரை அபகரித்திருப்பதும் தெரிய வந்தது.