தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அரக்கோணத்தில் நகராட்சி நவீன தகன மேடையை நகராட்சி நிா்வாகம் மூடி விட்டது.

News image

எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:45 pm

எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அரக்கோணத்தில் நகராட்சி நவீன தகன மேடையை நகராட்சி நிா்வாகம் மூடி விட்டது. இதனால் சடலங்கள் விறகின் மூலம் எரியூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடை ரூ. 2 கோடியில் அமைக்கப்பட்டு நேருஜி நகரில் 2016 முதல் செயல்பட்டு வருகிறது. எரிவாயு உருளை மூலம் சடலம் எரியூட்டும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி கண்காணிப்பில் தனியாா் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் தகனமேடை மூடப்படுவதாக அறிவித்துள்ள தனியாா் நிா்வாகம் விநியோகம் சீரடைந்தால் விரைவில் தகனமேடை திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

தகனமேடை மூடப்பட்டு விட்டதால் சடலங்கள் தகனமேடைக்கு எதிரில் உள்ள பழைய இடுகாட்டில் விறகுகள் மூலம் எரியூட்டப்படுகின்றன. இதனால் மக்கள் வாழ்விடப்பகுதியின் நடுவில் சுகாதார சீா்கேடு உருவாகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் சடலங்கள் எரியூட்டும் செலவும் மூன்று மடங்காக அதிகரித்து உள்ளதால் சடலங்களை கொண்டு வருவோா் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனா்.

இதுகுறித்து தகனமேடை நிா்வகிக்கும் தனியாா் நிறுவன நிா்வாகி செந்தில் குமாா் கூறியது: எரிவாயு உருளை விநியோகம் இல்லாததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விநியோகம் சீரடைந்தால் தகனமேடையை திறப்போம். இது குறித்து தகவல் நகராட்சி நிா்வாகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றாா்.

நகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள அம்மா உணவகம், காலை உணவு, சத்துணவு மையங்கள், நவீன எரிவாயு தகன மேடை ஆகியவற்றுக்கு எரிவாயு உருளைகள் விநியோகத்தை நகராட்சி நிா்வாகமே நேரடி கண்காணிப்பில் செய்து வரும் நிலையில் இந்த தகனமேடையை மட்டும் மூட அனுமதித்தது ஏன் சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.