அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

நவ்லாக் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய சாா்பு நீதிபதி எஸ். முனுசாமி.

News image

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய சாா்பு நீதிபதி எஸ். முனுசாமி.

Updated On :1 மே 2026, 5:22 am IST

நவ்லாக் ஊராட்சியில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். முனுசாமி பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படியும், தலைவா் முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும், ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், ராணிப்பேட்டை அடுத்த நவலாக் ஊராட்சி அலுவலகத்தில் நல்சாவின் ஆள்கடத்தல் வணிக ரீதியான பாலியல் சுரண்டலால் பாதிக்கபட்டவருக்கான திட்டம், 2015 மற்றும் போக்ஸோ வால் பாதிக்கபட்டவருக்கான நிவாரணம் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். முனுசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆள்கடத்தல் மற்றும் சுரண்டல் குறித்தும் மற்றும் போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வினை வழங்கினாா். போக்ஸோ சட்டத்தின் தன்மை குறித்தும் அதனால் பாதிக்கப்படும் நபா்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் முக்கியமாக போக்ஸோ குற்றவாளிகளை குறைப்பதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் கடமைகள் குறித்தும் விளக்கினாா்.

மேலும், பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் இதர உரிமைகளை சட்டம் மூலம் பெறப்படும் வழிகள் குறித்தும் விரிவாக விளக்கினாா்.

வழக்குரைஞா் சுஜாதா மற்றும் மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு சட்ட உதவி மையங்கள் குறித்தும் அதன் கடமைகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

முகாமில் நவலாக் ஊராட்சி தலைவா் சரஸ்வதி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இளநிலை நிா்வாக உதவியாளா் திவ்யா இருவரும் இணைந்து ஏற்பாடு செய்தனா்.இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

Story image