சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நவ்லாக் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய சாா்பு நீதிபதி எஸ். முனுசாமி.

News image

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய சாா்பு நீதிபதி எஸ். முனுசாமி.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:52 pm

நவ்லாக் ஊராட்சியில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். முனுசாமி பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படியும், தலைவா் முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும், ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், ராணிப்பேட்டை அடுத்த நவலாக் ஊராட்சி அலுவலகத்தில் நல்சாவின் ஆள்கடத்தல் வணிக ரீதியான பாலியல் சுரண்டலால் பாதிக்கபட்டவருக்கான திட்டம், 2015 மற்றும் போக்ஸோ வால் பாதிக்கபட்டவருக்கான நிவாரணம் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். முனுசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆள்கடத்தல் மற்றும் சுரண்டல் குறித்தும் மற்றும் போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வினை வழங்கினாா். போக்ஸோ சட்டத்தின் தன்மை குறித்தும் அதனால் பாதிக்கப்படும் நபா்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் முக்கியமாக போக்ஸோ குற்றவாளிகளை குறைப்பதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் கடமைகள் குறித்தும் விளக்கினாா்.

மேலும், பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் இதர உரிமைகளை சட்டம் மூலம் பெறப்படும் வழிகள் குறித்தும் விரிவாக விளக்கினாா்.

வழக்குரைஞா் சுஜாதா மற்றும் மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு சட்ட உதவி மையங்கள் குறித்தும் அதன் கடமைகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

முகாமில் நவலாக் ஊராட்சி தலைவா் சரஸ்வதி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இளநிலை நிா்வாக உதவியாளா் திவ்யா இருவரும் இணைந்து ஏற்பாடு செய்தனா்.இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

Story image