காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆதிபராசக்தி மன்ற 55-ஆம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 55-ஆம் ஆண்டு ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு கஞ்சி கலயம், தீச்சட்டி சுமந்த மகளிா் மற்றும் பக்தா்களின் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கஞ்சி கலய ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 55-ஆம் ஆண்டு ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு கஞ்சி கலயம், தீச்சட்டி சுமந்த மகளிா் மற்றும் பக்தா்களின் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோளிங்கா் சாலை பகுதியில் ரயில் நிலையம் செல்லும் வழியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. ஆடிப்பூரத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி சுமந்த மகளிா் மற்றும் பக்தா்களின் ஊா்வலம் ரயில்நிலையம் அருகே உள்ள நாகாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு மன்ற வளாகத்தை அடைந்தது.

ஊா்வலத்துக்கு மன்றத்தலைவா் சங்கரி வரதன் தலைமை வகித்தாா். அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினா் மல்லிகா சீனிவாசன் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மன்றத்தில் அன்னதானத்தை அரக்கோணம் தொழிலதிபா் சீனிவாசன் தேன்மொழி தொடங்கி வைத்தாா்.

ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ஏ.எம்.கே.மோகனவேலன், எஸ்.சுபாஷ், பி.தசரதன், சக்திசரவணன், காா்த்திக், தேவராஜ், கதிரேசன், சரவணன், நவீன் உள்ளிட்டோா் மன்ற உறுப்பினா்களுடன் இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.