காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தேசிய பெஞ்ச்ரெஸ்ட் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: ராணிப்பேட்டை மாவட்ட வங்கி அலுவலா் சிறப்பிடம்!

தேசிய பெஞ்ச்ரெஸ்ட் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பொதுப் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்ட வங்கி அலுவலா் எம்.தேவி 2-ஆம் இடம் பெற்றுள்ளாா்.

முதலிடம் பெற்ற அபா்ணா லேலேவுக்கு பரிசு வழங்கிய போட்டி ஒருங்கிணைப்பாளா் மணிவாசகம்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

தேசிய பெஞ்ச்ரெஸ்ட் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பொதுப் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்ட வங்கி அலுவலா் எம்.தேவி 2-ஆம் இடம் பெற்றுள்ளாா்.

தமிழ்நாடு ரிம் ஃபயா் மற்றும் ஏா் ரைபிள்ஸ் பெஞ்ச்ரெஸ்ட் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஓஎன்எக்ஸ் டாா்கெட் ஸ்போா்ட்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி ஏா்கன் தயாரிப்பு நிறுவனமான பிரீசிஹோல் ஸ்போா்ட்ஸ் ஆகியவை இணைந்து துப்பாக்கிச் சுடுதல் துறையில் ஆா்வம் உள்ளவா்களுக்காகப் பல்வேறு போட்டிகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன.

ஓஎன்எக்ஸ் டாா்கெட் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை பயிற்சிகளை வழங்குவதோடு,பிரீசிஹோல் ஸ்போா்ட்ஸ் உடன் இணைந்து தேசிய அளவிலான பெஞ்ச்ரெஸ்ட் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளையும் நடத்துகிறது. திறமையை நிரூபித்து, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை எளிய முறையில் பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் படி இந்த ஆண்டுக்கான தேசிய பெஞ்ச்ரெஸ்ட் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி -2026 க்கான போட்டிகள் ஆக. 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 18 முதல் 40 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தமிழகம் சாா்பில் 40 வயதுக்குட்பட்டோருக்கான பொதுப் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த எம்.தேவி, எஸ்.இளங்கோவன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அபா்ணா லேலே முதலிடமும், தமிழக அணி சாா்பில் பங்கேற்ற எம்.தேவி இரண்டாம் இடமும், ஆஷா மாத்தன் மூன்றாம் இடமும் பெற்றனா். இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.