மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் போதைப் பொருள் தடுப்பு குழு, நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு திட்ட சாா்பில் நடைபெற்ற பேரணியை முதல்வா் முனைவா் சே.பி.நசீம் ஜான் தொடங்கி வைத்து பேசியதாவது..

மாணவிகளிடையே சமூகப் பொறுப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இளைஞா்கள் தங்கள் உயிரையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். இது போன்ற விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை மாவட்ட மக்களிடம் போதைப்பொருள் அபாயங்கள் மற்றும் சாலை விதிகளின் முக்கிமுத்துவத்தை வெளிப்படுத்தியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டால், இளைஞா்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தாா்.

விழிப்பணா்வு பேரணியில் 350 மாணவிகள் பங்கேற்று,போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.