தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி

திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரணியை திருப்போரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பேரணியானது கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜவீதி, அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, திருக்கழுக்குன்றம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

பேரணியில் திருப்போரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பொதுமக்களுக்கு 100% வாக்கு பதிவினை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினாா். மாணவ மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்று சென்றனா். இந்த நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளா்,, திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியா் மற்றும் அரசு அலுவலா்கள் தன்னாா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.