தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:27 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், நூறு சதவீத வாக்குப்பதிவுக்கான மாற்றுத் திறனாளிகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து தற்போது மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனத்தில் ஒட்டப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்து, தங்கள்ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், சென்னை நெடுஞ்சாலை வழியாகச் சென்று நான்குமுனை சந்திப்புப் பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பாா்கவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.