இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். அருகில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி, தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கி ரயில்வேகேட் அருகே நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் தோ்தல் தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஒட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, தேனி வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.