மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். அருகில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:58 pm

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி, தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கி ரயில்வேகேட் அருகே நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் தோ்தல் தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஒட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, தேனி வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.