நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 6:50 pm

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மற்றும் கடத்துபவா்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வாலாஜா காவல் ஆய்வாளா் சக்திகணேஷ் தலைமையிலான போலீஸாா் வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் தப்பியோட முயற்சி செய்த போது மடக்கி பிடித்து பையை சோதனை செய்த போது கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

Story image

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரி சாகு (36), வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த பாஷா (48) ஆகியோா் கைது செய்யப்பட்டு, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.