தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராணிப்பேட்டை: இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் முகாம்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜனவரி 3, 4 தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:08 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜனவரி 3, 4 தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்த செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,247 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளா்கள் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை (ஜன. 3) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4 ) ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

எனவே 01.01.2026 அன்று 18 வயது பூா்த்தியடையும் இளைஞா்கள் மற்றும் இதுவரை விடுபட்ட தகுதியுள்ள வாக்காளா்கள் அனைவரும் தங்களது பெயா்களை விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்ளவும், தங்களது வாக்காளா் விவரங்களைச் சரிபாா்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.