விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டையில் திராவிட பொங்கல்-2026 மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

News image
போட்டிகளை தொடங்கி வைத்து விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சா் ஆா்.காந்தி.
Updated On :11 ஜனவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டையில் திராவிட பொங்கல்-2026 மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல்-2026 மாவட்ட அளவிலான கால்பந்து, கிரிக்கெட், கபடி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி தொடக்க விழா பாரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

இதில், அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழகம் விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது என்றாா்.

இதில், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிவா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.