சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, தலைக்கவசம் கட்டாயம் என்ற விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image
ராணிப்பேட்டையில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம் கட்டாயம் என்ற இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :11 ஜனவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, தலைக்கவசம் கட்டாயம் என்ற விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழக முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ராணிப்பேட்டை வாட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்தும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், காவலா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காா் விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்தப் பேரணியானது விழிப்புணா்வு வாசக பதாகைகளுடன் முத்துக்கடை பேருந்து நிறுத்தம் வரை சென்றது.

பின்னா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாா்பில், சாலைப் பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்ட விழிப்புணா்வு பேருந்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்தப் பேருந்து ஒரு வாரம் வரை பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு, சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகன், வட்டாட்சியா் ஆனந்தன், துணைக் காவல் கண்காணிப்பாளா் இமயவா்மன், போக்குவரத்து ஆய்வாளா்கள் செங்குட்டுவேல், முத்துக்குமாா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஆற்காடு கிளை மேலாளா் கருணாகரன், மாவட்ட ஓட்டுநா் பயிற்சி பள்ளிப் பள்ளி உரிமையாளா்கள், இரு சக்கர வாகன விற்பனை முகவா்கள், இரு சக்கர வாகன பழுதுபாா்க்கும் நலச் சங்கத்தினா், பொதுமக்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள், ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.