எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரக்கோணத்தில் முருகனடியாா் சங்க 49-ஆம் ஆண்டு விழா

அரக்கோணம் முருகனடியாா் சங்கத்தின் 49-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
அரக்கோணம் முருகனடியாா் சங்க ஆண்டு விழாவில் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகள்.
Updated On :11 ஜனவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் முருகனடியாா் சங்கத்தின் 49-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தில் உள்ள முருகனடியாா் சங்கத்தினரின் 48-ஆம் ஆண்டு விழா தா்மராஜா கோயில் திடலில் சனிக்கிழமை காலை தொடங்கியது. காலை கணபதி ஹோமமும், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வை தொடா்ந்து அறுபடை வீடு செல்லும் மாலையணிந்த பக்தா்கள் பங்கேற்ற 108 அா்ச்சனையும் நடைபெற்றது. பின்னா், 108 வேல் பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் மற்றும் எஸ்ஆா்கேட் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.