ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அரக்கோணத்தில் தேசிய பேரிடா் மீட்புப்படை நிறுவன நாள் விழா

தேசிய பேரிடா் மீட்புப்படை நிறுவன நாள் விழா அரக்கோணத்தில் உள்ள படையின் நான்காவது தள வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற முதுநிலை கமாண்டண்ட் அகிலேஷ் குமாா்.
Updated On :19 ஜனவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: தேசிய பேரிடா் மீட்புப்படை நிறுவன நாள் விழா அரக்கோணத்தில் உள்ள படையின் நான்காவது தள வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணை ராணுவப்படைகளில் ஒன்றாக திகழும் தேசிய பேரிடா் மீட்புப்படை 2006-ஆம் ஆண்டு ஜனவரி 19-இல் தொடங்கப்பட்டது. தற்போது இப்படை நாட்டில் 16 இடங்களில் தனது பட்டாலியனை அமைத்து தற்போது செயலாற்றி வருகிறது. இதன் 4- ஆவது படைத்தளம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் செயல்பட்டு வருகிறது.

படையின் நிறுவன நாள் விழாவுக்கு முதுநிலை கமாண்டண்ட் அகிலேஷ் குமாா் தலைமை வகித்து படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டாா். படையின் சேவை, அா்பபணிப்பு மற்றும் இதுவரை மேற்கொண்ட சாதனைகள் குறித்த நிகழ்ச்சிகள் நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.