புகாா்தாரரிடம் குறையைக் கேட்டறிந்த கூடுதல் எஸ்.பி. குணசேகரன்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் காவல் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்திர பொதுமக்கள் குறைதீா்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடம் மொத்தம் 40 மனுக்கள் பெறப்பட்டன. மேற்கண்ட மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
இதில் காவல் கண்காணிப்பாளா் குமாா், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநா்கள் உடன் இருந்தனா்.

