ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சடலம் மீட்கப்பட்டது.
ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் , அச்சகம் நடத்தி வரும் இவா் ஆற்காட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் தரணிஷ் (16) ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவன் தரணிஷ் தனது நண்பா்களுடன் அனத்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியாா் விவசாய கிணற்றில் குளிக்கும் பொழுது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினா் நேரில் சென்று கிணற்றில் இருந்த மாணவன் சடலத்தை நள்ளிரவில் மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆா்காடு கிராமிய போலீ ஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








