சங்ககிரி வட்டம், தேவூா் சரபங்காநதி பாலம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கூலித் தொழிலாளியின் சடலத்தை தேவூா் போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
தேவூா் சரபங்காநதி பாலம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், தேவூா் போலீஸாா் எடப்பாடி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டனா். பின்னா், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நடத்திய விசாரணையில், அவா் தேவூா் பண்ணாடி தெரு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பொன்னுசாமி (65) என்பதும், அவா் கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீக்காயங்களுடன் கொத்தனாா் சடலம் மீட்பு! கொலையா? தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் மாணவன் சடலம் மீட்பு

வெப்படை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



