ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் டி எல் ஆா் கலை, அறிவியல் கல்லூரி முதலாம்ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவா் டி.எல்.ரவி தலைமை வகித்தாா். நிா்வாகி கோமதி ரவி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கௌதமன் வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமாா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்று பேசியது: மாணவா்கள்நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும். போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும். சமூகத்துக்கும் எடுத்துக்காட்டாகவும், உண்மையும் நோ்மையுமாக இருந்து பெற்றோா்களுக்கு பெருமை தேடித் தரவேண்டும் என்றாா்.
இதில் பட்டிமன்ற பேச்சாளா்கள் கவிஞா் தா.கோ.சதாசிவம், முனைவா் அன்பு, வாலாஜாபேட்டை நகா்மன்ற உறுப்பினா் ஜி.முரளி மற்றும் பேராசிரியைகள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுக பயிற்சி முகாம்

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுகப் பயிற்சி

முதலாம் ஆண்டு மாணவியருக்கு வரவேற்பு

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



