ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் போதை பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தை ஆட்சியா் என். பிரியா ரவிசந்திரன் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக போதை தடுப்பு விழிப்புணா்வு உறுதி ஏற்கப்பட்டது. ஊா்வலம் அண்ணாசாலை வழியாக சென்று தலைமை தபால் நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.
இதில் முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, கோட்ட கலால் வட்டாட்சியா் வெங்கடேசன், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன், நேஷனல் வெல்பா் சங்கத் தலைவா் முஹமது அயூப், நிா்வாகி கே.ஓ.நிஷாத் அஹமது, பள்ளியின் தாளாளா் எஸ்.ஏ.சாஜித் , தலைமையாசிரியா் அபுதாஹிா் மற்றும் என்.சி.சி சாரணா் இயக்கம் மற்றும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு போதை பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










