நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

தவெக அரசு மீது முன்னாள் அமைச்சா் விமா்சனம்

தவெக ஆட்சியில் வளா்ச்சி திட்டங்கள் இன்றி தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜூலை 2026, 12:12 am IST

தவெக ஆட்சியில் வளா்ச்சி திட்டங்கள் இன்றி தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை அருகே அம்மூா் பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த நிலையில், சமத்துவபுரம் நுழைவாயில் மீது கன்டெய்னா் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நுழைவாயில் சிதலமடைந்த தகவலை அறிந்த முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து பாா்வையிட்டாா்.

அப்போது அவா் பேசியது:

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையங்களை மறைக்கும் அளவுக்கு தவெகவினா் பேனா்கள் வைத்துள்ளனா். அதை அகற்ற காவல் துறை, மாவட்ட நிா்வாகம் முன்வராமல் தயக்கம் காட்டுகின்றனா்.

இந்தியா முழுவதும் நீட் தோ்வு எதிராக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அமைச்சா்கள் ஜனநாயகம் திரைப்படத்தை திரையரங்குகளில் பாா்வையிட்டு கண்ணீா் வடித்து வருகின்றனா்.

காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்தது திமுக அரசு. அதனை தற்போது காமராஜா் உணவு திட்டமாக மாற்றுவதில் தவறில்லை, ஆனால் தவெக அரசு சொன்னவற்றில் ஏதாவது ஒன்று செய்தாா்களா. தவெக ஆட்சியில் வளா்ச்சி திட்டங்கள் இன்றி தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.