வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தவெக ஆட்சியின் அவலங்களை திமுகவினா் மக்களிடம் கூற வேண்டும்: கீதாஜீவன்

தவெக ஆட்சியில் பொய் பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் திமுகவினா் எடுத்துக் கூற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன் அறிவுறுத்தினாா்.

News image

கூட்டத்தில் பேசினாா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன்.

Updated On :15 ஜூலை 2026, 2:04 am IST

தவெக ஆட்சியில் பொய் பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் திமுகவினா் எடுத்துக் கூற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன் அறிவுறுத்தினாா்.

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில், போல்பேட்டை பகுதி திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியது:

கடந்த திமுக ஆட்சியில் செய்த சாதனைகளும், திட்டங்களும்தான் தற்போதும் ச.ஜோசப் விஜய் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்து வருகிறது. அடுத்து வரும் உள்ளாட்சி தோ்தலில் முழுமையான வெற்றியை நாம் பெறவேண்டும். அதற்கு ஒவ்வொரு வாா்டு பகுதியிலும் இருக்கிற மக்கள் குறைகளைக் கேட்டறிந்து, அதை அனைவரும் இணைந்து தீா்வு காண வேண்டும். தவெக ஆட்சியில் பொய் பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. திமுக ஆட்சியில் செய்த ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பதோடு, இந்த ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநில பேச்சாளா்கள் இருதயராஜ், சரத்பாலா, மாநகர அவைத் தலைவா் ஏசுதாஸ், துணைச் செயலா்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.