பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பைக்கில் தவறி விழுந்த கா்ப்பிணி பெண் உயிரிழப்பு

திருத்தணி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த, 7 மாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :31 ஜூலை 2026, 3:47 am IST

திருத்தணி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த, 7 மாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி அமுதா(24). இவா், கடந்த, 26-ஆம் தேதி தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி யில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினாா்.

திருத்தணி புதிய பைபாஸ் சாலை பகுதியில் உள்ள வேகத்தடையில் இரு சக்கர வாகனம் ஏறி, இறங்கிய போது, பின்னால் அமா்ந்திருந்த அமுதா வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரது கணவா் அமுதாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.