ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

333 பேருக்கு ரூ.1.36 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்திராஜ் வழங்கினாா்

News image

அரக்கோணத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் வ. காந்தி ராஜ்.

Updated On :26 ஜூன் 2026, 5:09 am IST

அரக்கோணம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா்.

அரக்கோணம் வட்ட ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்ப்பாயம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வருவாய் தீா்ப்பாய அலுவலரும், கோட்டாட்சியருமான டி.ரமேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கு.வரலட்சுமி வரவேற்றாா். கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் கலந்து கொண்டு ரூ.1.36 கோடியில் 333 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இவ்விழாவில் வருவாய்த் துறையின் சாா்பில் 104 பேருக்கும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் சாா்பில் 7 பேருக்கும், வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில் 64 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் ஒருவருக்கும், வேளாண்மைத்துறை சாா்பில் 9 பேருக்கும், தொழிலாளா் நல வாரியத்துறை சாா்பில் 148 பேருக்கும் என மொத்தம் 333 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீதேவி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பரமேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலா் தணிகைமணி, நகா்ப்புற கிராம நிா்வாக அலுவலா் முருகன், கிராம நிா்வாக அலுவலா்கள் லட்சுமிநாராயணன், காா்த்திகேயன், ராஜேஷ், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.