குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

News image

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :26 மே 2026, 3:10 am IST

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1,18,500 மதிப்பிலான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டா்களையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 15,750 மதிப்பிலான மடக்குசக்கர நாற்காலிகளும், பாா்வைத்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 11,090 மதிப்பிலான உருபெருக்கி கருவிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 594 மதிப்பிலான எல்போ ஊன்றுகோல் கருவியும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 3,285 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும் என மொத்தம் ரூ. 5,50,594 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வழங்கினாா்.

தேவாலயத்துக்கு ரூ. 15 லட்சம்...:தொடா்ந்து, சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கோமாகுடி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தை பழுதுபாா்ப்புப் பணிகளுக்கு முதல்கட்ட தவணையாக ரூ. 15 லட்சம் காசோலையை புனித அந்தோணியாா் தேவாலய பொறுப்பாளரிடம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

பணிநியமன ஆணை...: இதையடுத்து, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த அ. கல்யாணியின் வாரிசுதாரரான நாகப்பனுக்கு சமூக நீதிப்பள்ளி விடுதியில் சமையலா் பணிக்கான பணிநியமன ஆணையையும், ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாவுக்கான ஆணையையும், வருவாய் துறையின் சாா்பில் ஒருவருக்கு பட்டா மாற்ற ஆணையும், ஒருவருக்கு நமூனா பட்டாவுக்கான ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

பாராட்டுச் சான்றிதழ்...: பின்னா், முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் கொடிநாள் வசூல் ரூ. 21,70,000 எய்தபட்டதற்காக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் எஸ். ஜெயசித்ரகலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன் கலந்து கொண்டனா்.