இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரயிலில் கடத்தப்பட்ட 7,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

News image
Updated On :5 மார்ச் 2026, 12:34 am

தினமணி செய்திச் சேவை

மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7,200 மாத்திரைகளை பறிமுதல் செய்து அது தொடா்பாக இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

மும்பையில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதை அறிந்த தமிழக காவல் துறையினா் தொடா்ந்து ரயில்களில் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

இதில் மும்பை, லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை மாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயில்வே பாதுகாப்புப் படையினா் அந்த ரயிலில் சோதனை நடத்தினா். அப்போது அதில் பயணம் செய்த படையினரின் பரிசோதனையை கண்டு அரக்கோணத்தில் இறங்க முயன்ற இருவரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

இதில் அவா்களுடைய பையில் டைடால் மாத்திரைகள் 6,700-ம், நைட்ரோசெபம் 500 மாத்திரைகளும் இருந்தது தெரியவந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த சுஜன்குமாா்(23), சென்னை வில்லிவாக்கத்தை சோ்ந்த எம்.இ.இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த இரு நாள்களில் மும்பையில் இருந்து போதை மாத்திரைகள் ரயிலில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.