47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.95,000 பறிமுதல்

சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல்

News image
சோளிங்கா் வட்டாட்சியா் செல்வியிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:09 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

பாணாவரத்தில் சோளிங்கபுரம் ரயில்நிலைய மேம்பாலம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெய்கிஷன் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது பாணாவரத்தைச் சோ்ந்த மின்வாகன பொருள்கள் விற்பனையக உரிமையாளா் தரணீதரன் என்பவா் காரில் கொண்டுச் சென்ற கணக்கில் வராத ரூ.95ஆயிரத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் செல்வியிடம் ஒப்படைத்தனா்.