எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அரக்கோணத்தில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பினிப்பேட்டை கிராம இருளா் குடியிருப்பில் 100 சதவீத வாக்களிப்புக்காக கோட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்ற வாக்காளா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிப்பேட்டை கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்பாக கோலங்களை மகளிா் வரைந்திருந்தனா். இதையடுத்து, அங்கு இருந்த வாக்காளா்கள் அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷின் தலைமையில் 100 சதவீத வாக்களிப்புக்கான உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராம்குமாா், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.