பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரக்கோணத்தில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கும்பினிப்பேட்டை கிராம இருளா் குடியிருப்பில் 100 சதவீத வாக்களிப்புக்காக கோட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்ற வாக்காளா்கள்.
Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிப்பேட்டை கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்பாக கோலங்களை மகளிா் வரைந்திருந்தனா். இதையடுத்து, அங்கு இருந்த வாக்காளா்கள் அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷின் தலைமையில் 100 சதவீத வாக்களிப்புக்கான உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராம்குமாா், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.