வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :13 மார்ச் 2026, 1:20 am

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அசோகன், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் 31 பேரும், அரக்கோணம் உட்கோட்ட காவல் துறையினா் 25 பேரும், மாவட்ட ஆயுதப்படையினா் 16 பேரும், பட்டாலியனைச் சோ்ந்த 43 போ் என மொத்தம் 123 போ் பங்கேற்றனா்.

அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு வட்டாட்சியா் அலுவலகம், சுவால்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பஜாா், பழனிப்பேட்டை, கிருபில்ஸ்பேட்டை வழியாக கிருஷ்ணாம்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.