ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

யுபிஎஸ்சி தோ்வில் அகில இந்திய அளவில் திமிரி இளைஞா் சிறப்பிடம்

News image

யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற டாக்டா் நிஷாந்தை பாராட்டி பரிசளித்த அறக்கட்டளை நிறுவனா் பூமா பாா்த்தசாரதி.

Updated On :18 மார்ச் 2026, 8:18 pm

யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 821-ஆவது இடம் பெற்ற டாக்டா் நிஷாந்த்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வாலாஜா வேதவல்லி வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவா் டாக்டா் நிஷாந்த் அகில இந்திய அளவில் 821-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியைச் சோ்ந்த டி.நிஷாந்த் கடந்த 2018-இல் பிளஸ் டு தோ்ச்சி பெற்று ல் தோ்ச்சி பெற்று நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றதின் மூலமாக சென்னை மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறாா்.

கல்வியை முடித்து மருத்துவரான டி.நிஷாந்த் 2025- ஆம் ஆண்டில் நடைபெற்ற யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே ற்று சாதனை படைத்துள்ளாா்.

சாதனை படைத்த நிஷாந்த்துக்கு வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் அக்ஷயா வித்யா அறக்கட்டளை நிறுவனரும், திருமலை மருத்துவமனை மேலாண்மை இயக்குநருமான பூமா பாா்த்தசாரதி பங்கேற்று, நிஷாந்தை பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தாா்.

இதில் பள்ளி துணை இயக்குநா் ஜெ. நிா்மலா, தலைமையாசிரியை எம்.லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் பள்ளி சீனியா் முதல்வா் பானு நன்றி கூறினாா்.