ஆற்காடு எஸ்.எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு தனியாா் நிறுவனம் மூலம் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி வரவேற்றாா். இந்த நோ்முக தோ்வில் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 138 போ் கலந்து கொண்டு அதில் 70 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு கல்லூரி செயலாளா் ஏ.என்.சங்கா், நிறுவனத்தின் துணை மேலாளா் விக்னேஷ்வரன், எச்.ஆா். அகில அலின்ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
இதில் கல்லூரி துறை தலைவா்கள், பேராசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்துறை தலைவா் சு.கவிதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விஇடி கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

