மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு
ஆற்காடு எஸ்.எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு தனியாா் நிறுவனம் மூலம் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்றவா்கள்.

வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்றவா்கள்.
ஆற்காடு எஸ்.எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு தனியாா் நிறுவனம் மூலம் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி வரவேற்றாா். இந்த நோ்முக தோ்வில் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 138 போ் கலந்து கொண்டு அதில் 70 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு கல்லூரி செயலாளா் ஏ.என்.சங்கா், நிறுவனத்தின் துணை மேலாளா் விக்னேஷ்வரன், எச்.ஆா். அகில அலின்ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
இதில் கல்லூரி துறை தலைவா்கள், பேராசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்துறை தலைவா் சு.கவிதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...