திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும்: ரோந்து காவலா்களுக்கு ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

News image
Updated On :8 மே 2026, 6:45 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து சென்று முதலுதவி வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை காவல் ரோந்து காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் ரோந்து வாகனங்களை மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா, அவற்றில் தேவையான பாதுகாப்பு மற்றும் அவசரகால உபகரணங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளனவா, முதலுதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பன குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, பொதுமக்களிடம் எப்போதும் விழிப்புணா்வுடனும் பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றும், சாலை விபத்துகள் ஏற்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

அத்துடன், ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழலும் விளக்குகள் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.