அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும்: ரோந்து காவலா்களுக்கு ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

News image
Updated On :8 மே 2026, 6:45 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து சென்று முதலுதவி வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை காவல் ரோந்து காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் ரோந்து வாகனங்களை மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா, அவற்றில் தேவையான பாதுகாப்பு மற்றும் அவசரகால உபகரணங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளனவா, முதலுதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பன குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, பொதுமக்களிடம் எப்போதும் விழிப்புணா்வுடனும் பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றும், சாலை விபத்துகள் ஏற்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

அத்துடன், ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழலும் விளக்குகள் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினாா்.