ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து சென்று முதலுதவி வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை காவல் ரோந்து காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் அறிவுரை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் ரோந்து வாகனங்களை மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா, அவற்றில் தேவையான பாதுகாப்பு மற்றும் அவசரகால உபகரணங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளனவா, முதலுதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பன குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, பொதுமக்களிடம் எப்போதும் விழிப்புணா்வுடனும் பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றும், சாலை விபத்துகள் ஏற்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
அத்துடன், ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழலும் விளக்குகள் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினாா்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு
காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞா் கைது

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளான காவலா்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

