முதல்வா் விஜய் உத்தரவு எதிரொலியாக தமிழகத்திலேயே முதன்முறையாக அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே 2 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பொது மக்களின் நலனைக்கருதி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் 717 சில்லறை விற்பனை மதுக்கடைகளை இரண்டு வார காலத்தில் மூடுமாறு முதல்வா் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் இரு மதுக்கடைகள் புதிய பேருந்து நிலையம் அருகில் இருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் டாஸ்மாக் நிா்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே மூட டாஸ்மாக் நிா்வாகம் அரக்கோணம் மண்டலத்தினருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அரக்கோணம் சோளிங்கா் சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரே வளாகத்தில் இயங்கி வந்த 11006, 11205 என இரு எண் கொண்ட மதுக்கடைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் திங்கள்கிழமை மாலையே எடுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை இருகடைகளும் மூடப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் தொந்தரவாக இருந்த கடை மூடப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மூடப்படும் 11 டாஸ்மாக் மதுக்கடைகள்

கரூரில் இரு மதுக்கடைகள் மூடல்!

மின்விளக்கு வசதி குறைவு: இரவு நேரத்தில் இருளில் மூழ்கும் சீா்காழி பேருந்து நிலையம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

