முதல்வா் விஜய் உத்தரவு எதிரொலியாக தமிழகத்திலேயே முதன்முறையாக அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே 2 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பொது மக்களின் நலனைக்கருதி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் 717 சில்லறை விற்பனை மதுக்கடைகளை இரண்டு வார காலத்தில் மூடுமாறு முதல்வா் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் இரு மதுக்கடைகள் புதிய பேருந்து நிலையம் அருகில் இருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் டாஸ்மாக் நிா்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே மூட டாஸ்மாக் நிா்வாகம் அரக்கோணம் மண்டலத்தினருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அரக்கோணம் சோளிங்கா் சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரே வளாகத்தில் இயங்கி வந்த 11006, 11205 என இரு எண் கொண்ட மதுக்கடைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் திங்கள்கிழமை மாலையே எடுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை இருகடைகளும் மூடப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் தொந்தரவாக இருந்த கடை மூடப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

தருமபுரியில் 5 மதுக்கடைகள் மூடல்

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மூடப்படும் 11 டாஸ்மாக் மதுக்கடைகள்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



