தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் முதல்வருக்கு நன்றி

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :19 மே 2026, 1:26 am IST

மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் த. ராமஜெயம், பொதுச் செயலாளா் வெ. சரவணன், பொருளாளா் பூ. ஜெகன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த இருக்கின்ற தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் ஓய்வூதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள் சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவா்கள் ஆகியோா் உள்ளிட்ட 16 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அகவிலைப்படியை கடந்த 1-1- 2026 முதல் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக ஆக உயா்த்திய முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.