தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மனைவியைக் கொன்ற கணவன் கைது

ராணிப்பேட்டை அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த காரை புது தெரு பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் ரவி (49). இவரது மனைவி தேவி (35), பெயிண்டா் ரவிக்கு அவரது மனைவி மீது சந்தேகம் காரணமாக குடும்ப தகராறு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை பெயிண்டா் ரவி தனது மனைவி தேவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளாா் .

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீஸாா் தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் ரவியை கைது செய்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.