சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மனைவியைக் கொன்ற கணவன் கைது

ராணிப்பேட்டை அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த காரை புது தெரு பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் ரவி (49). இவரது மனைவி தேவி (35), பெயிண்டா் ரவிக்கு அவரது மனைவி மீது சந்தேகம் காரணமாக குடும்ப தகராறு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை பெயிண்டா் ரவி தனது மனைவி தேவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளாா் .

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீஸாா் தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் ரவியை கைது செய்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.