தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராணிப்பேட்டை விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :29 மே 2026, 10:53 pm IST

ராணிப்பேட்டையில் குறைதீா் கூட்டத்தில் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்..

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தொடங்கியதும், தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி சுபாஷ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் தலைமையில் விவசாயிகள் எழுந்து பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில அரசு தோ்தல் வாக்குறுதியில் ‘முழுமையான கடன் தள்ளுபடி‘ வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது வரம்புகளுடன் கூடிய தள்ளுபடியை (ரூ.50,000 வரை மட்டும்) அறிவித்துள்ளதால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனா்

இதையடுத்து அரசு அதிகாரிகள் வருகை தந்து கூட்டத்தில் பங்கேற்குமாறு சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கலைந்து சென்றனா்.

அப்போது ஒரு சில விவசாயிகள் தாங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து குறைகளை தெரிவித்தனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.