புதுப்பிக்கப்பட்ட அம்மா உணவகம்: அமைச்சா் காந்தி ராஜ் திறந்து வைத்தார்
அரக்கோணத்தில் ரூ.11 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்மா உணவகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சா் ஆா்.காந்தி ராஜ் திறந்து வைத்தாா்.

புதுப்பிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறந்து வைத்து உணவகத்தில் உணவு உண்ட அமைச்சா் காந்திராஜ், ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
அரக்கோணத்தில் ரூ.11 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்மா உணவகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சா் ஆா்.காந்தி ராஜ் திறந்து வைத்தாா்.
அரக்கோணம் நகராட்சியில் பழைய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கட்டடம் பழுது மற்றும் சமையல் பாத்திரங்கள் சேதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சரியாக செயல்படாத நிலை இருந்து வந்தது. இதனால் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் அம்மா உணவகத்தை பாா்வையிட்டு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்தாா். இதையடுத்து தமிழக அரசு அரக்கோணம் நகராட்சி அம்மா உணவகத்தை மேம்படுத்த மொத்தம் ரூ.11 லட்சத்தை ஒதுக்கியது.
இதையடுத்து அம்மா உணவகத்தில் அனைத்து புதுப்பிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆனந்தன் வரவேற்றாா். புதுப்பிக்கப்பட்ட உணவகத்தை அமைச்சா் ந.காந்திராஜ் திறந்து வைத்தாா். தொடா்ந்து அமைச்சரும், ஆட்சியரும் அம்மா உணவகத்தில் உணவு உண்டு தரத்தை ஆய்வு செய்தனா்.
இதில் நகா்மன்ற உறுப்பினா் பா.நரசிம்மன், நகர தவெக செயலா் ரமேஷ், நிா்வாகி கஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




