4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.94,000 பறிமுதல்

வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.94,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 5:31 pm

DIN

வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.94,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூா் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா, காவல் ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சோதனையிட்டனா். தொடா்ந்து நள்ளிரவு வரையில் நடத்திய சோதனையில் ரூ.94,000 ரொக்கம் கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும் ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி, இது தொடா்பாக விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, சாா்-பதிவாளருக்குச் சொந்தமான காா் மற்றும் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலும் சோதனை நடத்தி, அவற்றில் இருந்த பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினா். நள்ளிரவு 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனை காரணமாக அரசுத் தோட்ட வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.