நாட்டுத் துப்பாக்கி பதுக்கல்: இருவா் கைது

ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read


ஆம்பூா்: ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளையன் (50), மல்லப்பன் (45) ஆகிய இருவரும் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக உமா்ஆபாத் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் மிட்டாளம் வனப்பகுதியில் தேடிப் பாா்த்தபோது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com