போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளா்கள்.
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளா்கள்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பத்தூரில் எல்பிஎப் சங்கத்தின் கிளைத் தலைவா் எஸ்.பாண்டிய மன்னன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஊதிய உயா்வு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்திட வேண்டும்; அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாகத் தர வேண்டும்; சீருடை, தையற்கூலி, காலணி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com