இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், சிலிண்டா் விலையேற்றத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியினா்.
Updated on
1 min read

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், சிலிண்டா் விலையேற்றத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.அன்வா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.முல்லை, ஏஐடியுசி தலைவா் ராமமூா்த்தி, துணைத் தலைவா் செல்வராஜன் கண்டன உரையாற்றினா்.

வேளாண் சட்டம், சிலிண்டா் விலையேற்றம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள், தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நகரச் செயலாளா் ஜாகீா் உசேன், நகரத் துணைச் செயலாளா்கள் சிராஜ்கான், அப்ரோஸ், நகரப் பொருளாளா் கே.ஹைதா்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com